கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தின் முன்பு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தின் முன்பு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டண உயர்வு, காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடவேண்டும், லாரிகளுக்கான மூன்றாம் நபர் காப்பீடு உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜுலை 20) முதல் அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஆட்டோ தொழிலைப் பாதிக்கக்கூடிய வகையில் காப்பீடு கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்தும் கோவை தெற்கு தாலுகா அலுவகம் முன்பு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் போது, மத்திய அரசிற்கு எதிராகவும், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.

டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டண உயர்வு, காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடவேண்டும், லாரிகளுக்கான மூன்றாம் நபர் காப்பீடு உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜுலை 20) முதல் அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஆட்டோ தொழிலைப் பாதிக்கக்கூடிய வகையில் காப்பீடு கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்தும் கோவை தெற்கு தாலுகா அலுவகம் முன்பு மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் போது, மத்திய அரசிற்கு எதிராகவும், பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்தக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
