கோவை: ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலில் தமிழ் முறை லட்சார்ச்சனையை பிள்ளையார் பீடம் பொண்மணிவாசக அடிகளார் தொடங்கி வைத்தார்.
கோவை: ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலில் தமிழ் முறை லட்சார்ச்சனையை பிள்ளையார் பீடம் பொண்மணிவாசக அடிகளார் தொடங்கி வைத்தார்.
மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழா மற்றும் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு இன்று அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதியம் கோவில் மண்டபத்தில் அம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் காட்சி அளித்தார்.
தொடர்ந்து கோவை அனந்த நாராயணன் ஸ்ரீதேவி குடும்பத்தினர் சார்பில் ஏக தின தமிழ் முறைப்படி லட்சார்ச்சனை நடந்தது. பிள்ளையார் பீடம் பொன்மணி வாசக அடிகளார் சிறப்பு பூஜை செய்து லட்சார்ச்சனை தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து பெண் பக்தர்கள் பவானி ஆற்றில் புனித நீராடி கோவில் வளாகத்தில் அம்மனின் வாகனமான சிங்க வாகனத்திற்கு முன்பாக எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்கி வழிபாடு நடத்தினர். பின்னர் நடைபெற்ற சிவனடியார்கள் தமிழ் மொழியில் நூறாயிரம் பரவுதல் அர்ச்சனை நிகழ்ச்சியில் அர்ச்சனைக்குத் தகுந்தவாறு மலர்களைக் காணிக்கையாக்கி வழிபாடு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் திருவிழா மற்றும் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு இன்று அம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதியம் கோவில் மண்டபத்தில் அம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் காட்சி அளித்தார்.
தொடர்ந்து கோவை அனந்த நாராயணன் ஸ்ரீதேவி குடும்பத்தினர் சார்பில் ஏக தின தமிழ் முறைப்படி லட்சார்ச்சனை நடந்தது. பிள்ளையார் பீடம் பொன்மணி வாசக அடிகளார் சிறப்பு பூஜை செய்து லட்சார்ச்சனை தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து பெண் பக்தர்கள் பவானி ஆற்றில் புனித நீராடி கோவில் வளாகத்தில் அம்மனின் வாகனமான சிங்க வாகனத்திற்கு முன்பாக எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்கி வழிபாடு நடத்தினர். பின்னர் நடைபெற்ற சிவனடியார்கள் தமிழ் மொழியில் நூறாயிரம் பரவுதல் அர்ச்சனை நிகழ்ச்சியில் அர்ச்சனைக்குத் தகுந்தவாறு மலர்களைக் காணிக்கையாக்கி வழிபாடு செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.