கோவை: போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் புதிய மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கடந்த 16-ம் தேதி தொடங்கி வைத்தார்.
கோவை: போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் புதிய மேம்பாலத்தை தமிழக முதலமைச்சர் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கடந்த 16-ம் தேதி தொடங்கி வைத்தார்.

தற்போது மக்கள் பயன்பாடில் உள்ள இந்த பாலத்தின் இடதுபுற பக்கவாட்டு பகுதியில் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோதியது.
இந்த விபத்தில், பாலத்தின் இடதுபுற பாதுகாப்பு சுவர் தவிடு பொடியாக உடைந்தது.

இதைப்பார்த்து, பெரிய விபத்து என்று நினைத்த மக்கள் பதறியடித்து ஓட, அங்கு கம்பீரமாய் நின்று கொண்டிருந்தது விபத்துக்குள்ளான லாரி.

'லேசா ஒரசுனதுக்கே என்ன ஆச்சு பாத்தியா' என்று வடிவேலு கேட்பது போல, தற்போது அந்த புதிய பாலத்தின் நிலை உள்ளது.
மேம்பாலத்தின் இந்த நிலையை பார்த்த பொதுமக்கள், "இது உண்மையாவே மேம்பாலம் தானா?" என்று நகைத்துச் சென்றனர்.

முன்னதாகவே, இந்த மேம்பாலத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பல்வேறு குழப்பங்கள் நீடிப்பதாக செய்தி பதிவிட்டுள்ளது சிம்ப்ளிசிட்டி செய்திக்குழு.
அந்த செய்தியை பார்க்க கீழே உள்ள லிங்க்-கை கிளிக் செய்யுங்க...
மேலும் படிக்க
போத்தனூர் ரயில்வே பாலத்திற்கு ஒதுக்கிய தொகையில் குளறுபடி: எது சரியான தொகை?