கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரம்: போலி பேரிடர் மேலாண்மை பயிற்சியாளருக்கு 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

கோவை: பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் போலி பயிற்சியாளருக்கு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை: பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் போலி பயிற்சியாளருக்கு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

நரசீபுரம் பகுதியில் உள்ள கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் கடந்த 12-ம் தேதி நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது போலி பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர், லோகேஸ்வரி என்ற மாணவியை இரண்டாவது மாடியில் இருந்து தள்ளிவிட்டார்.

இதில் எதிர்பாராத விதமாக மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு ஆலாந்துறை போலீசார், போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் ஆறுமுகம், போலியான ஆவணங்களைக் கொடுத்து நாடு முழுவதும் 1,467 கல்வி நிலையங்களில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. போலீசார் 7 நாட்கள் அனுமதி கேட்டிருந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை வரை 4 நாட்கள் மட்டும் விசாரணைக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இன்று நீதிமன்றத்தில் ஆறுமுகம் ஆஜர்படுத்தப்பட்டர். அவரை வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க 6-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கண்ணன் உத்தரவிட்டார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...