108 ஆம்புலன்சை வெளியேற்றிய கோவை அரசு மருத்துவமனை நிர்வாகம்

கோவை: அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு வரும் 108 ஆம்புலன்ஸ், மருத்துவமனை நிர்வாகத்தினால் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு வரும் 108 ஆம்புலன்ஸ், மருத்துவமனை நிர்வாகத்தினால் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ்கள் மொத்தம் 34 செயல்படுகிறது. அதேபோல், நீலகிரி மாவட்டத்தில் இருந்தும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்தும் 10 முறைக்கு மேல் 108 ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வருகின்றனர்.



இப்படி தினமும் பரபரப்பாக வரும் 108 ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு அருகில் உள்ள காலி இடத்தில் நிறுத்தப்படுவது வழக்கம். 

ஆனால், இன்று வழக்கம் போல நோயாளியை மருத்துவமனைக்குள் அனுமதித்துவிட்டு 108 வாகன ஓட்டுனர்கள் மருத்துவ உதவியாளர் வரும்வரை காத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் வெளியே வரமுடியாதபடி மருத்துவக் கல்லூரியின் பேருந்துகள் இடையூறாக நிறுத்தப்பட்டிருந்தது.

இதனால் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வண்டி வெளியேற வழிவிடும்படி மருத்துவக் கல்லூரி பேருந்து ஓட்டுனரிடம் கேட்டபோது, அவர்கள் வழிவிட மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



இப்படியிருக்க, பேருந்து ஓட்டுநர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகம் 108 ஆம்புலன்சை மருத்துவமனைக்குள் நிறுத்தக் கூடாது என்று கூறியது. இதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் 108 ஆம்புலன்சை மருத்துவமனையையொட்டிய சாலையோரத்தில் நிறுத்தினர்.

இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கூறுகையில், "நாங்கள் நேரம் காலம் பார்க்காமல் பொதுமக்களை ஆபத்தான சூழல்களில் சாலைகளிலிருந்தும் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் இருந்தும் சிகிச்சைக்காக அழைத்து வருகிறோம்.

அப்படி நோயாளிகளை அழைத்து வந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு எங்கள் ஸ்ட்ரெச்சரில் வைத்து மருத்துவர்களுக்காக காத்திருக்கிறோம். எங்களுடைய ஸ்ட்ரெச்சரை தரும் வரை நாங்கள் 108 வாகனத்தை மருத்துவமனையில் இருந்து எடுக்க முடியாது.



அரசு மருத்துவமனைக்கு வந்தால் குறைந்தபட்சம் 20 நிமிடமாவது நாங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இப்படி இருக்க நாங்கள் மருத்துவமனையின் வெளிப்புறத்தில் போய் நிற்பது என்பது எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது." என்றனர். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...