செல்போனில் வரும் தேவையற்ற அழைப்புகளின் தொல்லைகளில் இருந்து விடுபட புதிய விதிகளை டிராய் பரிந்துரைத்துள்ளது.
செல்போனில் வரும் தேவையற்ற அழைப்புகளின் தொல்லைகளில் இருந்து விடுபட புதிய விதிகளை டிராய் பரிந்துரைத்துள்ளது.
சீரமைக்கப்பட்ட புதிய விதிகளை டிராய் தற்போது பரிந்துரைத்துள்ளது. அதில், விளம்பரம் மற்றும் சந்தை தொடர்பான அழைப்புகளை சந்தாதாரரின் அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
தேவையற்ற அழைப்புகள் தங்கள் தொலைபேசிக்கு வருவதாக வாடிக்கையாளர்களிடமிருந்து டிராய்க்கு தொடர் புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட விளம்பரதாரர் மூலமாக மட்டுமே வியாபார செய்திகள் மற்றும் அழைப்புகளை ஏற்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களை டிராய் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக, வாடிக்கையாளர்களின் அனுமதியைப் பெறலாம் என்றும் டிராய் பரிந்துரைத்துள்ளது.
"புதிய விதிகள் சந்தாதாரர்களுக்கு அதிக சாதகமாக இருக்கும், ஏனெனில் அவர்கள் ஒப்புதலின்றி இனி விளம்பர அழைப்புகள் வராது. விதியை மீறினால் ரூ.1,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நிம்மதியடைவார்கள்." என்கிறது டிராய்.
சீரமைக்கப்பட்ட புதிய விதிகளை டிராய் தற்போது பரிந்துரைத்துள்ளது. அதில், விளம்பரம் மற்றும் சந்தை தொடர்பான அழைப்புகளை சந்தாதாரரின் அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
தேவையற்ற அழைப்புகள் தங்கள் தொலைபேசிக்கு வருவதாக வாடிக்கையாளர்களிடமிருந்து டிராய்க்கு தொடர் புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில், அங்கீகரிக்கப்பட்ட விளம்பரதாரர் மூலமாக மட்டுமே வியாபார செய்திகள் மற்றும் அழைப்புகளை ஏற்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களை டிராய் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக, வாடிக்கையாளர்களின் அனுமதியைப் பெறலாம் என்றும் டிராய் பரிந்துரைத்துள்ளது.
"புதிய விதிகள் சந்தாதாரர்களுக்கு அதிக சாதகமாக இருக்கும், ஏனெனில் அவர்கள் ஒப்புதலின்றி இனி விளம்பர அழைப்புகள் வராது. விதியை மீறினால் ரூ.1,000 முதல் ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நிம்மதியடைவார்கள்." என்கிறது டிராய்.