கோவை: வால்பாறை அருகே உள்ள காஞ்சமலை எஸ்டேட் குடியிருப்பில் நேற்று நள்ளிரவில் காட்டு யானை புகுந்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கோவை: வால்பாறை அருகே உள்ள காஞ்சமலை எஸ்டேட் குடியிருப்பில் நேற்று நள்ளிரவில் காட்டு யானை புகுந்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
காஞ்சமலை எஸ்டேட் குடியிருப்பில் நேற்று நள்ளிரவில் காட்டு யானை ஒன்று புகுந்தது. மேலும், அங்குள்ள சந்திரன் என்பவரது வீட்டினை இடித்து வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியது.

யானையின் சத்தம் கேட்ட குடியிருப்பு வாசிகள், சத்தம் எழுப்பி காட்டு யானையை விரட்டினர். இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
யானை வந்தது தொடர்பாக, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய வனத்துறையினரே சம்பவ இடத்திற்கு வராமல் இருந்தது வேதனையாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து யானையை காட்டிற்குள் விரட்ட அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சமலை எஸ்டேட் குடியிருப்பில் நேற்று நள்ளிரவில் காட்டு யானை ஒன்று புகுந்தது. மேலும், அங்குள்ள சந்திரன் என்பவரது வீட்டினை இடித்து வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியது.

யானையின் சத்தம் கேட்ட குடியிருப்பு வாசிகள், சத்தம் எழுப்பி காட்டு யானையை விரட்டினர். இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
யானை வந்தது தொடர்பாக, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய வனத்துறையினரே சம்பவ இடத்திற்கு வராமல் இருந்தது வேதனையாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து யானையை காட்டிற்குள் விரட்ட அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.