வால்பாறையில் குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானை : மக்கள் பீதி

கோவை: வால்பாறை அருகே உள்ள காஞ்சமலை எஸ்டேட் குடியிருப்பில் நேற்று நள்ளிரவில் காட்டு யானை புகுந்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை: வால்பாறை அருகே உள்ள காஞ்சமலை எஸ்டேட் குடியிருப்பில் நேற்று நள்ளிரவில் காட்டு யானை புகுந்ததால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். 

காஞ்சமலை எஸ்டேட் குடியிருப்பில் நேற்று நள்ளிரவில் காட்டு யானை ஒன்று புகுந்தது. மேலும், அங்குள்ள சந்திரன் என்பவரது வீட்டினை இடித்து வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியது. 



யானையின் சத்தம் கேட்ட குடியிருப்பு வாசிகள், சத்தம் எழுப்பி காட்டு யானையை விரட்டினர். இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

யானை வந்தது தொடர்பாக, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என்றும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய வனத்துறையினரே சம்பவ இடத்திற்கு வராமல் இருந்தது வேதனையாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து யானையை காட்டிற்குள் விரட்ட அப்பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...