தீண்டாமை திணிப்பைக் கண்டித்து சாலை மறியல் : சமையலர் பாப்பாளுக்கு மீண்டும் அதே பள்ளியில் பணி வழங்க வலியுறுத்தல்

திருப்பூர்: ​​திருப்பூரில் ஒரு சில சமூகத்தினரின் எதிர்ப்பால் அருந்ததியின ஊழியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள், தலித் விடுதலைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சேவூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: ​​திருப்பூரில் ஒரு சில சமூகத்தினரின் எதிர்ப்பால் அருந்ததியின ஊழியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள், தலித் விடுதலைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சேவூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



அவிநாசியை அடுத்த திருமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 75 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் சமையலராக அதேப் பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் (42) என்பவர் பணியிட மாற்றத்தால் கடந்த திங்கட்கிழமையன்று (ஜுலை16) பணிக்கு வந்தார். இதையறிந்த மற்ற சமூகத்தினர், அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பாப்பாள் சமையல் செய்தால் தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக் கூறி, பள்ளியில் இருந்து 24 குழந்தைகளை அழைத்துச் சென்றனர். 



அதோடு, இவர்களது புகாரால் பாப்பாளை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்து வட்டார வளர்ச்சி அதிகாரி இன்று உத்தரவிட்டார். இதனைக் கண்டிக்கும் விதமாகவும், தாழ்த்தப்பட்ட பாப்பாளை இதே பள்ளியில் சமையலராக பணி அமர்த்தக் கோரியும் விடுதலை சிறுத்தைகள், தலித் விடுதலைக் கட்சி, ஆதி தமிழர் பேரவை மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது, சாதியைக் காரணம்காட்டி பணியிட மாற்றம் செய்த வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.



இது குறித்து தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சியுடன், போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், சேவூர் சாலையில் அமர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டதைத் தொடர்ந்து, சார் ஆட்சியர் சரவணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...