வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாளை நூறு கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் - திருப்பூர் லாரி உரிமையாளர்கள் சங்கம்

திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நடைபெறவிருக்கும் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் திருப்பூரில் நாள் ஒன்றுக்கு 100 கோடி வரையிலான வர்த்தகம் பாதிக்கும் என்று திருப்பூர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை நடைபெறவிருக்கும் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் திருப்பூரில் நாள் ஒன்றுக்கு 100 கோடி வரையிலான வர்த்தகம் பாதிக்கும் என்று திருப்பூர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

டீசல் விலை உயர்வு, நாள்பட்ட சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், தமிழக அரசு டீசல் மீதான வாட் வரியை குறைக்க குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் நாடு முழுவதும் லாரி மற்றும் வேன் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தால் சாய ஆலை நிறுவனங்களுக்கும், பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கும், கோழிப்பண்ணை உள்ளிட்ட நிறுவனங்களுக்கும், அதேபோல் சிறு மற்றும் குறு பின்னலாடை நிறுவனங்களுக்கு லாரிகள் மற்றும் வேன்கள் மூலம் எடுத்துச் செல்லப்படும் சரக்குகளை கொண்டு செல்லப் போவதில்லை என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாள் ஒன்றுக்கு திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 100 கோடி வரையிலான வர்த்தகம் பாதிப்பு ஏற்படுவதோடு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்று திருப்பூர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே மத்திய, மாநில அரசுகள் இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராமசாமி கூறியுள்ளார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...