கோவை: டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பான அறிக்கையை விஷ்ணுபிரியாவின் தந்தையிடம் ஒப்படைக்க சி.பி.ஐ.,க்கு கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு தொடர்பான அறிக்கையை விஷ்ணுபிரியாவின் தந்தையிடம் ஒப்படைக்க சி.பி.ஐ.,க்கு கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா கடந்த 2015-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., "குற்றவாளிகள் யாரும் இல்லை. இவ்வழக்கை கை விடுகிறோம்." என்று கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இதன் மீதான விசாரணைக்காக விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், விசாரிக்கப்பட்ட சாட்சிகள், அறிக்கை உள்ளிட்ட விவரங்களை ரவி கோரிய நிலையில், அவற்றை தருமாறு சி.பி.ஐ.,க்கு நீதிபதி நாகராஜ் உத்தரவிட்டார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா கடந்த 2015-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ., "குற்றவாளிகள் யாரும் இல்லை. இவ்வழக்கை கை விடுகிறோம்." என்று கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இதன் மீதான விசாரணைக்காக விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், விசாரிக்கப்பட்ட சாட்சிகள், அறிக்கை உள்ளிட்ட விவரங்களை ரவி கோரிய நிலையில், அவற்றை தருமாறு சி.பி.ஐ.,க்கு நீதிபதி நாகராஜ் உத்தரவிட்டார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.