பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்கள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்கள் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது
பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரிவிதிப்பிற்குள் கொண்டு வர வேண்டும், டோல்கேட் கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், இன்சூரன்ஸ் பிரிமியம் கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டர் காங்கிரஸ் நாடு தழுவிய வேலை நிறுத்ததிற்கு அழைப்பு விடுத்துள்ளது. கோவை மாவட்டத்தில் நாளை முதல் 10,000-க்கும் மேற்பட்ட லாரிகள் ஓடாது.
இதன் காரணமாக பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், இதனை சமாளிக்கும் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிசந்திரன், பொள்ளாச்சி சப்- கலெக்டர் மற்றும் அனைத்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள், வழங்கல் துறை அதிகாரிகள் ஆயில் கார்பரேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், "அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்," என எச்சரிக்கை விடுத்தார்.