எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

கோவை: எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு கோவையில் வரும் 20-ம் தேதி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.

கோவை: எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு கோவையில் வரும் 20-ம் தேதி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட சிறுதொழில்கள் சங்கமான கொடிசியா அமைப்பு கடந்த 2015முதல் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழானை நடத்தி வருகிறது. சென்னை, ஈரோடு புத்தகத் திருவிழாக்களைப் போலவே தமிழகத்தின் பிரதானமான புத்தகத் திருவிழாக்களுள் ஒன்றாக புத்தக ஆர்வலர்களால் பெரிதும் கொண்டாடப்படும் நிகழ்வாக கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா திகழ்கிறது. 

சுமார் 275 ஸ்டால்கள், லட்சக்கணக்கான புத்தகங்கள், ஏராளமான கலை நிகழ்ச்சிகள், சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் என பத்து நாட்கள் கொண்டாட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா வரும் நாளை முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.

புத்தகத் திருவிழாவின் சிறப்பம்சமாக ஒவ்வொரு ஆண்டும் இலக்கியத்திற்கு மிகச்சிறந்த பங்களிப்பினை ஆற்றிய எழுத்தாளர் ஒருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 

2016-ஆம் ஆண்டிற்கான விருது எழுத்தாளர் பாலகுமாரனுக்கும், 2017-ஆம் ஆண்டிற்கான விருது எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் வழங்கப்பட்டது. 2018-ஆம் ஆண்டிற்கான விருது பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது ஒரு லட்சம் ரூபாய் தொகையும் பாராட்டுப் பத்திரமும் உள்ளடக்கியது. 

கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா தொடக்கவிழாவும் விருது வழங்கும் நிகழ்ச்சியும் ஜூலை 20-ஆம் தேதி கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. 

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் டி. உதயச்சந்திரன், சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் கவிஞர் சிற்பி பலசுப்பிரமணியம்,கொடிசியா தலைவர் ஆர். ராமமூர்த்தி, புத்தகத் திருவிழா தலைவர் எஸ். செளந்தரராஜன், இலக்கியக்கூடல் தலைவர் டி. பாலசுந்தரம்,அறிவுக்கேணி தலைவர் ஈ.கே. பொன்னுசாமி, தொழிலாளர் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கவிதாசன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...