'கோவை புத்தக திருவிழா' நாளை மறுநாள் தொடக்கம்

கோவை : கொடிசியா அரங்கில் கோவை புத்தக திருவிழா நாளை மறுநாள் தொடங்கி 29-ம் தேதி வரை நடக்கிறது.


கோவை : கொடிசியா அரங்கில் கோவை புத்தக திருவிழா நாளை மறுநாள் தொடங்கி 29-ம் தேதி வரை நடக்கிறது. 

தென்னிந்தியாவின் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசியின் இணைந்து நடத்தும் இந்தப் புத்தகக் கண்காட்சி, கோவை கொடிசியா அரங்கில் நாளை மறுநாள் தொடங்கி 29-ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு ஹூசூர் சாலையில் உள்ள கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது. 

அப்போது, புத்தகக் கண்காட்சி தலைவர் சவுந்தரராஜன் பேசுகையில், "இப்புத்தக திருவிழாவில் 265 அரங்குகள் அமைக்கப்பட்டு தமிழ், ஆங்கிலம் மட்டுமில்லாமல் பிற இந்திய மொழிகளின் நூல்களின் பதிப்புகள் கண்காட்சியில் கிடைக்கும். மேலும், இக்கண்காட்சியில் தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சேர்ந்த 175 பதிப்பகங்கள் பங்கேற்க உள்ளனர். புத்தகக் கண்காட்சியில் கலை நிகழ்ச்சிகள், விவாத அரங்குகள், உரை நிகழ்ச்சிகள் உள்பட சிறப்பு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெறும்.

இந்த ஆண்டு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு கொடிசியாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது. கடந்த ஆண்டு 60,000 பார்வையாளர்கள் இந்தக் கண்காட்சியை பார்வையிட்டனர். ரூ. 2.5 கோடி அளவிற்கு வணிகமும் நடைபெற்றது. இந்த ஆண்டு அது மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன். பார்வையாளர்கள் காலை 11.00 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தக் கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம். இதனைப் பள்ளி கல்வி துறை செயலர் உதயசந்திரன் தொடங்கி வைக்க உள்ளார்," என்றார். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...