வரவேற்பில்லாத நடத்துனர் இல்லாப் பேருந்துகள் : வசூல் குறைவால் பேருந்துகளைக் குறைக்க திட்டம்..?

கோவை: கோவையில் ஒரு சில வழித்தடங்களில் வசூல் குறைவு காரணமாக நடத்துனர் இல்லா பேருந்துகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவை: கோவையில் ஒரு சில வழித்தடங்களில் வசூல் குறைவு காரணமாக நடத்துனர் இல்லா பேருந்துகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் இருந்து மதுரை, சேலம், திருச்சி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட வழித்தடங்களில் கோவை மண்டலத்தில் 40 பேருந்துகள் நடத்துனர் இல்லாமல் இயக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு போக்குவரத்து கழகம் சார்பில் ஈரோட்டில் இருந்து கோவைக்கு ‘ஈரோ 100' என்கிற பெயரில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில், சேலம், திருச்சி, மதுரை போன்ற பகுதிகளுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. பேருந்துகளின் இருக்கைகளில் முழுவதுமாக நிரம்பிவிடுகின்றன. ஆனால், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர் வழித்தடங்களில் பயண இருக்கைகள் முழுவதுமாக நிரம்புவதில்லை. இதனால், வசூல் மிகவும் குறைவாக உள்ளது. ஆகையால், இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் நடத்துனர் இல்லாப் பேருந்துகள் குறைக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை - மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் பகுதிகளுக்கு நடத்துனர் இல்லாப் பேருந்துகளின் இயக்கம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 54 இருக்கைகள் கொண்ட பேருந்துகளில் காலை, மாலை நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் 14 முதல் 17 பயணிகள் மட்டுமே பெரும்பாலும் பயணிக்கின்றனர். இதனால், இந்த வழித்தடங்களில் நடத்துனர் இல்லாப் பேருந்துகளை காலை, மாலை மட்டும் இயக்க அல்லது குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம், இந்த வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் முக்கிய நிறுத்தங்களில் மட்டும் நிறுத்தி செல்லவும் யோசனை செய்யப்பட்டு வருகிறது," என்றார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...