யானைகள் வழித்தடத்தை மீட்பதில் குழப்பம்: தமிழக அரசு - உச்சநீதிமன்றம் மாறுபட்ட நிலைப்பாடு

தமிழக வனப் பாதுகாப்பில் மாநில அரசும், உச்சநீதிமன்றமும் மாறுபட்ட நிலைப்பாட்டில் இருப்பதால், யானைகள் வழித்தடத்தை மீட்டெடுப்பதில் குழப்பம் நிலவி வருகிறது.

தமிழக வனப் பாதுகாப்பில் மாநில அரசும், உச்சநீதிமன்றமும் மாறுபட்ட நிலைப்பாட்டில் இருப்பதால், யானைகள் வழித்தடத்தை மீட்டெடுப்பதில் குழப்பம் நிலவி வருகிறது. 

தமிழக மலைப்பிரதேசங்களில் உள்ள யானை வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில், யானை வழித்தடங்களில் உள்ள கட்டுமானங்கள் மற்றும் 400 தனியார் விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், யானை வழித்தடத்தில் கட்டுமானப் பணிகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, 4 வாரத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக வனப்பகுதிகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டெடுக்கும் வகையிலான உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு பெரும்பாலானோர் வரவேற்பு தெரிவித்தனர்.

இதனிடையே, கடந்த 9-ந் தேதி தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தனியார் வன பாதுகாப்பு சட்ட திருத்தம் அன்றைய தேதி முதல் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார் என்று சட்டசபையில் அறிவித்தார். இதன் மூலம், தனியார் வன பாதுகாப்பு சட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நிலங்களை விற்க, வாங்க, மரங்களை வெட்டவோ அனுமதியளிக்கப்பட்டுள்ளது.



யானைகள் மற்றும் யானையின் வழித்தடங்களைப் பாதுகாக்கும் வகையில் உச்சநீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் வகுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், வனத்துறையினருக்கு சொந்தமான இடங்களை விற்கவோ, பயன்படுத்தவோ அனுமதி அளித்து தமிழக அரசு சட்டத்திருத்தம் செய்திருப்பது, உச்சநீதிமன்றத்தின் நோக்கத்திற்கு முரணாக இருக்கிறது. இதன்மூலம், யானைகள் மற்றும் யானையின் வழித்தடங்களை மீட்டெடுப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர் கே. மோகன்ராஜ் கூறுகையில், "தமிழக அரசு மேற்கொண்டுள்ள சட்டத்திருத்தம், யானைகளை வழித்தடத்தை சட்டப்பூர்வம் ஆக்காது. சில தனியார் வனப் பகுதிகளில் கட்டுமானங்களை மேம்படுத்துவதற்கான கோரிக்கை இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் நிராகரிக்கப்பட்டாலும், பின்னர் தமிழக அரசின் மறுஆய்வுக்கு உட்படுத்தப்படுத்தப்படும். 

இதன்மூலம், ஊழலுக்கு வழிவகை செய்யும். மேலும், இந்தப் பகுதிகள் முக்கிய சுற்றுச்சூழல் மிக்கவையாகும். மேலும், சிறுசிறு காவிரி நீர் ஊற்றுகளாக இருக்கும் இந்தப் பகுதி, யானைகளின் வழித்தடங்களாகும். இதனை ஆக்கிரமிப்பு செய்தால், வனச் சுற்றுச்சூழல்முறையில் பிரச்சனைகள் ஏற்படும்," என்றார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...