கோவை: கோவையில் உள்ள உணவகங்கள், வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 50 டன் தேங்காய் தொட்டிகளை இறுதிச் சடங்குக்காக காசிக்கு அனுப்புகிறது 'ப்ரீத் பவுண்டேசன்' தன்னார்வ அமைப்பு.
கோவை: கோவையில் உள்ள உணவகங்கள், வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 50 டன் தேங்காய் தொட்டிகளை இறுதிச் சடங்குக்காக காசிக்கு அனுப்புகிறது 'ப்ரீத் பவுண்டேசன்' தன்னார்வ அமைப்பு.
கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்காக இந்த சேவையை செய்வதாக கூறுகிறார், 'ப்ரீத் பவுண்டேசன்' தன்னார்வ அமைப்பின் நிறுவனர் டாக்டர்.அஷ்வின் நித்திஷ். இது குறித்து அவர் கூறுகையில், "இந்த திட்டத்திற்கு 'பசுமை காசி' என்று பெயர் சூட்டியுள்ளோம். மரங்கள் கார்பன் டை ஆக்சைடின் வங்கிகள் ஆகும்.
மரங்களை எரிக்கும் போது கார்பன் உமிழ்வுகள் அதிகமாகும். எனவே, மரங்களுக்கு பதிலாக தேங்காய் தொட்டிகளை நாங்கள் அனுப்புகிறோம். கடந்த இரண்டு மாதங்களாக சேகரிக்கப்பட்ட தேங்காய் தொட்டிகள், காசியில் உள்ள மணிகர்ணிகை காடுகளில், சடலங்களை எரிக்க பயன்படுகிறது.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2000 டன் தேங்காய் தொட்டிகளை அனுப்ப நாங்கள் முயற்சி செய்கிறோம். இளைஞர்கள் இத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறோம். அடுத்த கட்டமாக, அரசுப் பள்ளி குழந்தைகள் மூலம் தேங்காய் தொட்டிகளை சேகரிக்க முயற்சிப்போம்." என்றார்.
கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்காக இந்த சேவையை செய்வதாக கூறுகிறார், 'ப்ரீத் பவுண்டேசன்' தன்னார்வ அமைப்பின் நிறுவனர் டாக்டர்.அஷ்வின் நித்திஷ். இது குறித்து அவர் கூறுகையில், "இந்த திட்டத்திற்கு 'பசுமை காசி' என்று பெயர் சூட்டியுள்ளோம். மரங்கள் கார்பன் டை ஆக்சைடின் வங்கிகள் ஆகும்.
மரங்களை எரிக்கும் போது கார்பன் உமிழ்வுகள் அதிகமாகும். எனவே, மரங்களுக்கு பதிலாக தேங்காய் தொட்டிகளை நாங்கள் அனுப்புகிறோம். கடந்த இரண்டு மாதங்களாக சேகரிக்கப்பட்ட தேங்காய் தொட்டிகள், காசியில் உள்ள மணிகர்ணிகை காடுகளில், சடலங்களை எரிக்க பயன்படுகிறது.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2000 டன் தேங்காய் தொட்டிகளை அனுப்ப நாங்கள் முயற்சி செய்கிறோம். இளைஞர்கள் இத்திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று விரும்புகிறோம். அடுத்த கட்டமாக, அரசுப் பள்ளி குழந்தைகள் மூலம் தேங்காய் தொட்டிகளை சேகரிக்க முயற்சிப்போம்." என்றார்.