கோவை: கோவையில் பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பலவகை மீன்களால் தயாரிக்கப்பட்ட கடல் உணவுத் திருவிழாவில் ஏராளமான உணவுப் பிரியர்கள் கலந்து கொண்டனர்.
கோவை: கோவையில் பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பலவகை மீன்களால் தயாரிக்கப்பட்ட கடல் உணவுத் திருவிழாவில் ஏராளமான உணவுப் பிரியர்கள் கலந்து கொண்டனர்.
கோவை - அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் (le- meridian) இந்தத் திருவிழா நடைபெற்று வருகிறது. ஜுலை 13-ம் தேதி தொடங்கிய இத்திருவிழா வருகிற 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளில் இருந்தும் மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. கடம்பா (Squits), டைகர் பிராண்ஸ் (Tiger prawns ), லாப்டர் (laughter), கால்ம்ஸ் (calms), அக்டோபஸ் (octobus), சுறா புட்டு உள்ளிட்ட 60 வகையான மீன்களில் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பொதுமக்களின் பார்வைக்காகவும், ருசித்து மகிழவும் வைக்கப்பட்டு உள்ளது.

மேலும், காண்டினெண்டல், ஒரினெண்டல், தென்னிந்திய கடல் உணவுகள், சைனீஸ், ரசியன் போன்ற நாடுகளின் உணவுகள் இங்கு இடம் பெற்று உள்ளது.

இது குறித்து விழாவின் ஒருங்கிணைப்பாளரும், லீ மெரிடியன் ஹோட்டலின் உதவி தலைமை சமையலருமான கே. சக்திவேல் கூறுகையில், "வாழை இலையில் மடித்துத் தரப்படும் கறிமீன் பொரித்தது உள்ளிட்ட நெத்திலி, மீன்வறுவல், இறால் வறுவல், மத்தி மீன் உள்ளிட்ட பல உணவுகள் பொதுமக்களை ஈர்க்கும் வகையில் சமைக்கப்பட உள்ளது. மாலை 6.30 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த உணவுத் திருவிழா நடைபெறும். பெரியவர்களுக்கு வரியுடன் சேர்த்து ரூ. 1,200, சிறியவர்களுக்கு அதில் 50 சதவீதம் தள்ளுபடி தரப்படும்," என்றார்.
