நீலகிரி : தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கூடலூர் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை வாகன ஓட்டிகளே அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.
நீலகிரி : தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கூடலூர் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை வாகன ஓட்டிகளே அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.
நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால், அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த மழையினால், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, மரங்களும் சாலைகளில் விழுந்து விபத்து ஏற்படுகிறது.
இந்த நிலையில், கூடலூர் அருகே உள்ள ஆமைகுளம் பகுதியில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்கு பெய்த தொடர் மழையால் சாலையில் சில மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அப்புறப்படுத்த மீட்புக் குழுவினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், அதிருப்தியடைந்த வாகன ஓட்டிகள் அதிகாரிகளின் உதவியை எதிர்பாராமல், அவர்களே சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர். மழைகாலங்களில் மீட்புக் குழுவினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து வரும் நிலையில், மீட்புக் குழுவினரின் இந்த அலட்சிய நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால், அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த மழையினால், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, மரங்களும் சாலைகளில் விழுந்து விபத்து ஏற்படுகிறது.
இந்த நிலையில், கூடலூர் அருகே உள்ள ஆமைகுளம் பகுதியில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்கு பெய்த தொடர் மழையால் சாலையில் சில மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அப்புறப்படுத்த மீட்புக் குழுவினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், அதிருப்தியடைந்த வாகன ஓட்டிகள் அதிகாரிகளின் உதவியை எதிர்பாராமல், அவர்களே சாலையில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர். மழைகாலங்களில் மீட்புக் குழுவினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து வரும் நிலையில், மீட்புக் குழுவினரின் இந்த அலட்சிய நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.