கோவையில் மாணவி மாடியில் இருந்து விழுந்த சம்பவம் : போலி பயிற்சியாளர் ஆறுமுகசாமிக்கு 4 நாட்கள் காவல்

கோவை: கோவை நரசிபுரம் அருகே தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்யின்போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலி பயிற்சியாளர் ஆறுமுகசாமிக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை நரசிபுரம் அருகே தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்யின்போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலி பயிற்சியாளர் ஆறுமுகசாமிக்கு 4 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

கோவை நரசிபுரத்தில் செயல்பட்டு வரும் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 12-ம் தேதி பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவிப் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, பேரிடர் காலங்களில் 2-வது மாடியில் இருந்து குதிக்கும் பயிற்சி மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. பயிற்சியின் போது, லோகேஸ்வரி என்ற மாணவியை இரண்டாவது மாடியில் இருந்து குதிக்குமாறு கூறிய போலி பயிற்சியாளர் ஆறுமுகம், அவரை கீழே தள்ளியுள்ளார். அப்போது, நிலை தடுமாறி முதல் மாடியில் இருந்த மழைத் தடுப்பு அமைப்பு மீது மோதி விழுந்த லோகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். 

இது குறித்து போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆறுமுகத்தின் சான்றிதழ்கள் போலி என்பதைக் கண்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோவை ஆறாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி கண்ணன், 20-ம் தேதி வரை 4 நாட்கள் ஆறுமுகத்தினை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்தார். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...