திருப்பூர்: திருப்பூர் அருகே போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்: திருப்பூர் அருகே போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 400 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரண்மனை புதூர் பகுதியில் இருந்து திருப்பூர் மாநகராட்சியில் பிற பகுதிகளுக்கு குட்கா பொருட்கள் அதிக அளவில் விநியோகிக்கப்படுவதாகப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், திருப்பூர் தெற்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு மொத்த விலை கடையில் (அஞ்சனா ஸ்டோர்ஸ்) பெட்டிகளைக் கொண்டு செல்லப்படுவது குறித்து சந்தேகமடைந்த போலீசார், அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதில், கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ குட்கா பொருட்களை போலிசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, அந்தக் கடையை நடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பரசுராமன் (27) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், டெல்லியில் இருந்து குட்கா பொருட்களை மொத்தமாக வரவழைத்து திருப்பூர் நகர் பகுதியில் உள்ள சிறிய கடைகளுக்கு விற்பதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த முருகேசன் என்பவரையும் கைது செய்தனர். மேலும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக லட்சுமணன், பாபு ஆகிய மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரண்மனை புதூர் பகுதியில் இருந்து திருப்பூர் மாநகராட்சியில் பிற பகுதிகளுக்கு குட்கா பொருட்கள் அதிக அளவில் விநியோகிக்கப்படுவதாகப் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், திருப்பூர் தெற்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு மொத்த விலை கடையில் (அஞ்சனா ஸ்டோர்ஸ்) பெட்டிகளைக் கொண்டு செல்லப்படுவது குறித்து சந்தேகமடைந்த போலீசார், அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதில், கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ குட்கா பொருட்களை போலிசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, அந்தக் கடையை நடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பரசுராமன் (27) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அதில், டெல்லியில் இருந்து குட்கா பொருட்களை மொத்தமாக வரவழைத்து திருப்பூர் நகர் பகுதியில் உள்ள சிறிய கடைகளுக்கு விற்பதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த முருகேசன் என்பவரையும் கைது செய்தனர். மேலும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக லட்சுமணன், பாபு ஆகிய மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.