பெண்களுக்கு இயற்கையான முறையில் மார்பகங்களை உருவாக்கும் நவீன சிகிச்சை அறிமுகம்

கோவை : மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு மார்புகளை இழந்த பெண்களுக்கு, இயற்கையான முறையில் மார்பகங்களை உருவாக்கும் நவீன சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை : மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு மார்புகளை இழந்த பெண்களுக்கு, இயற்கையான முறையில் மார்பகங்களை உருவாக்கும் நவீன சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

பெண்களுக்கு உள்ள புற்றுநோய்களில் மூன்றில் ஒரு பங்கு மார்பக புற்றுநோயாகும். ஒவ்வொரு நாளும் மார்பக புற்றுநோய் அதிரித்துக் கொண்டு வருகிறது. ஏனெனில், தற்போது உள்ள நவீன வாழ்க்கை நடைமுறையில் இளம் பெண்களும் மார்பக புற்றுநோயினால் பாதிப்படைகின்றனர். 25 வருடங்களுக்கு முன்பு 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள்தான் இந்த மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தற்போது 30 மற்றும் 40 வயதுடைய பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். 



இந்த நிலையில், மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு மார்புகளை இழந்த பெண்களுக்கு, இயற்கையான முறையில் மார்பகங்களை உருவாக்கும் நவீன சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை கங்கா மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மார்பகப் புற்றுநோய் மையத்தின் தலைவர் மருத்துவர் எச் ராஜ சபாபதி மற்றும் டாக்டா் ராஜா சண்முகம் கிருஷ்ணன் ஆகியோர் கலந்த கொண்டு பேசினர். 

மருத்துவர் டாக்டா் ராஜா சண்முகம் கிருஷ்ணன் கூறுகையில், "நோயாளியின் மார்பக புற்றுநோயின் அளவைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மார்பகத்தை அகற்றுவது குறித்து நோயாளிகளுடன் கலந்தாலோசிக்கப்படும். மார்பக மறுசீரமைப்பு சிலிக்கான் பொருத்தியும் அல்லது நோயாளிகளின் சதையை வைத்தே செய்ய முடியும். ஆனால், நோயாளிகளின் கதையை வைத்து மார்பக மறுசீரமைப்பு செய்வதுதான் சிறந்தது. அடி வயிற்றில் தோல், சதை மற்றும் இரத்த நாளங்கள் எடுப்பதினால் தழும்புகள் சேலை கட்டுவதன் மூலம் வெளியில் தெரியாமல் இருப்பதுடன், நவீன மைக்ரோ அறுவை சிகிச்சைகள் மூலம் எடுத்த தோல், தசை மற்றும் இரத்த நாளங்கள் மார்பில் இணைப்பதால், மார்பகத்தில் தழும்புகள் இல்லாமல், இயற்கையான மார்பகம் இருப்பதை உணர முடியும்," என்றார். 



பெண்களுக்கு உண்டாகும் மார்பக புற்றுநோய் மற்றும் மறுசீரமைப்பு பற்றிய சந்தேகங்களுக்குக் கங்கா மார்பாக புற்றுநோய் மையம் வாட்ஸ்-அப் உதவி எண் 99526-17171 என்கிற எண்ணில் நோயாளிகள், அவர்களுடைய மெடிக்கல் ரிப்போர்ட், புகைப்படம் அல்லது மார்பக புற்றுநோயிக்கான சிகிச்சையில் ஏற்படும் சந்தேகங்களை கேட்டு பதில் பெறலாம்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...