கோவை மாநகராட்சிக்கு எதிரான போராட்டத்தை ஒத்திவைக்கக் கோரிக்கை: திட்டமிட்டபடி 31-ம் தேதி போராட்டம் நடத்த அனைத்துக்கட்சிகள் முடிவு

கோவை: குடிநீர் விநியோக ஒப்பந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற இருக்கும் போராட்டத்தை ஒத்திவைக்க போலீசார் வேண்டுகோள் விடுத்த நிலையில், திட்டமிட்டபடி 31-ம் தேதி போராட்டத்தை நடத்த அனைத்துக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

கோவை: குடிநீர் விநியோக ஒப்பந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற இருக்கும் போராட்டத்தை ஒத்திவைக்க போலீசார் வேண்டுகோள் விடுத்த நிலையில், திட்டமிட்டபடி 31-ம் தேதி போராட்டத்தை நடத்த அனைத்துக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

கோவை மாநகர குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 'சூயஸ்' என்ற தனியார் நிறுவனத்திடம் 26 ஆண்டுகளுக்கு மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்காட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனிடையே, ஜூலை 31-ம் தேதி அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக அனைத்துக் கட்சியினர் மற்றும் போலீசார் இடையே ஆர்.எஸ்.புரம் காவல்நிலையத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், சட்டம், ஒழுங்கு துணை ஆணையாளர் லட்சுமி, உதவி ஆணையாளர்கள் வெங்கடேஷ் மற்றும் ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசியல் கட்சிகள் சார்பில் தி.மு.க., எம்.எல்.ஏ. கார்த்திக், காங்கிரஸின் மயூரா ஜெயகுமார், சி.பி.எம்.மின் அஜய்குமார் சி.பி.ஐ.,யின் சுந்தரம், ம.தி.மு.க.,வின் மோகன்குமார், வி.சி.,வின் இலக்கியன், த.பெ.தி.க.,வின் கு. இராமகிருட்டிணன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அப்போது, காவல்துறையின் தரப்பில் இருந்து கூறுகையில், "இந்த ஒப்பந்தம் அரசு போட்ட ஒப்பந்தம். எதிர்க்கட்சிகள் நடத்தும் இந்தப் போராட்டம் அரசுக்கு எதிரானது. எனவே, இந்தப் போராட்டத்திற்கு அனுமதிக்க முடியாது," எனத் தெரிவித்தனர். ஆனால், இது மக்களுக்கான குடிநீர் பிரச்சனை என்பதால் இப்போராட்டம் உறுதியாக நடைபெறும் அனைத்துக் கட்சியினர் கூறினர். இதனையடுத்து, கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவதை தவிர்த்து, வழக்கமாகப் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் இடத்தில் நடத்த வேண்டும் என போலீசார் வலியுறுத்தினர். ஆனால், இதனை ஏற்க மறுத்து அரசியல் கட்சியினர், இது குறித்து கலந்து பேசி முடிவெடுத்து அறிவிப்பதாகக் கூறி கலைந்து சென்றனர்.



இதனைத் தொடர்ந்து, கோவை மாநகர தி.மு.க., அலுவலகத்தில் எதிர்க்கட்சிகளின் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ஜூலை 31-ல் நடைபெறும் போராட்டத்தை எவ்வித தொய்வும் இல்லாமல் நடத்துவது, அதற்கான தயாரிப்பு பணிகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...