ஜி.என்., மில்ஸ் பகுதியில் அகற்றப்படாத குப்பைகள் : உணவாக உட்கொள்ளும் கால்நடைகள், நோய் பரவும் அபாயம்

கோவை: ஜி.என்.மில்ஸ் பகுதியில் சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளை அங்கு சுற்றித் திரியும் கால்நடைகள் உட்கொள்வதால், உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


கோவை: ஜி.என்.மில்ஸ் பகுதியில் சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளை அங்கு சுற்றித் திரியும் கால்நடைகள் உட்கொள்வதால், உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியில் சுப்ரமணியபாளையம் அமைந்துள்ளது. அங்குள்ள குடியிருப்புகளில் தேங்கும் குப்பைகள் மற்றும் கழிவுகள் அனைத்தும் ஒரே பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மாநகராட்சி ஊழியர்கள் இந்தக் குப்பைகளை அகற்றாததால், மலை போல குப்பைகள் குவிந்துள்ளன. இதனை, அப்பகுதியில் சுற்றித் திரியும் நாய், குதிரை மற்றும் கழுதை போன்ற கால்நடைகள் உட்கொள்கின்றன. அப்போது, பிளாஸ்டிக் பொருட்களையும் அவை உண்பதால், உயிரிழப்பு அபாயம் ஏற்படுகிறது.



"குப்பைகளை அகற்றுவதில் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கூறினால், இந்தப் பகுதி வடக்கு மண்டலத்தின் கீழ் வருவாகக் கூறுகின்றனர். மேலும் ஒரு சிலர் இது குறித்து தெரியாது எனக் கூறுகின்றனர். கவுன்சிலருக்கு அதிகாரம் கிடையாது. எனவே, அவரிடம் முறையிட முடியாது. இருப்பினும் இந்த நிலை குறித்து தகவல் தெரிவித்துள்ளோம். கால்நடைகள் குப்பைகளை உட்கொள்கின்றன. மேலும், அவற்றை சாலைகளில் பரப்பி விடுகின்றன. இதனால், வாகனங்களை ஓட்டுவதில் சிரம் ஏற்படுகிறது," இவ்வாறு கூறுகிறார் அப்பகுதிவாசி.

மேலும், தற்போது பெய்யும் தென்மேற்கு பருவ மழையினால் குப்பைகள் ஈரமாவதுடன், நோய் தொற்றும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எவே, மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரமணியபாளையம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மற்றொரு பகுதிவாசியான ராஜ்குமார் கூறுகையில்," குப்பைகள் தேங்கிக் கிடப்பதால், கொசுக்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளது. குப்பைக் கூழங்கள் கொசுக்களின் உற்பத்தியாகும் இடமாக உள்ளது. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

இதனிடையே, இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது:- வாரம் ஒருமுறை குப்பைகளை அகற்றி வருகிறோம். குதிரை உள்ளிட்ட கால்நடைகள் அங்கு உலா வருவது பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்திகிறது. அவற்றின் உரிமையாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.



Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...