திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடுமலையில் திருமூர்த்தி மலையில் புகழ்பெற்ற மும்மூர்த்திகளும் உள்ள அமண லிங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கோவிலை சுற்றி காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பஞ்சலிங்க அருவி செல்ல கோவில் நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது.