கோவை: பொள்ளாச்சி அருகே காண்டூர் கால்வாயின் ஏர்வால்வு உடைப்பால், திருமூர்த்தி அணைக்கு செல்லும் நீரானது, ஆழியாறு அணைக்குள் பாய்ந்து செல்கிறது.
கோவை: பொள்ளாச்சி அருகே காண்டூர் கால்வாயின் ஏர்வால்வு உடைப்பால், திருமூர்த்தி அணைக்கு செல்லும் நீரானது, ஆழியாறு அணைக்குள் பாய்ந்து செல்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை போன்ற பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பொள்ளாச்சி அருகே உள்ள தூணக்கடவு அணையில் இருந்து திருமூர்த்தி அணைக்கு 950 கன தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சர்க்கார்பதியில் மின் உற்பத்திக்கு பிறகு தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு செல்கிறது.

இந்நிலையில், ஆழியார் அருகே உள்ள சின்னார்பதி மலை குகையில் அமைக்கப்பட்டுள்ள ஏர் வாழ்வு (காற்று குழாய்) திடீரென உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் அதிகளவில் கசிந்து வருகிறது. அங்குள்ள மேல்மட்ட பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பழுதடைந்த பாலம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனிடையே, கசிவு அதிகமாக ஏற்பட்டால் சின்னார்பதி மலைவாழ் குடியிருப்பில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மலைவாழ் மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் திருமூர்த்தி அணைக்கு செல்லும் நீரின் பெரும்பகுதி, ஆழியாறு அணையில் கலக்கின்றது . இந்த ஏர்வால்வு உடைப்பால், அணையின் நீர்மட்டம் விரைவில் 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.