போத்தனூர் ரயில்வே பாலத்திற்கு ஒதுக்கிய தொகையில் குளறுபடி: எது சரியான தொகை?

கோவை: போத்தனூர் ரயில்வே மேம்பாலத்திற்கு ஒதுக்கிய நிதி தொடர்பாக, அ.தி.மு.க.,வினர் வைத்த பேனர்களிலும், அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலும் வெவ்வேறு விதமான தொகைகள் குறிப்பிடப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


கோவை: போத்தனூர் ரயில்வே மேம்பாலத்திற்கு ஒதுக்கிய நிதி தொடர்பாக, அ.தி.மு.க.,வினர் வைத்த பேனர்களிலும், அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலும் வெவ்வேறு விதமான தொகைகள் குறிப்பிடப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.



போத்தனூர் செயின்ட் ஜோசப் சர்ச் அருகே தொடங்கும் இந்த ரயில்வே பாலம், செட்டிபாளையம் சாலையில் உள்ள வெள்ளிங்கிரி காம்ப்ளக்ஸ் அருகே முடிவடைகிறது. 1.1 கி.மீ., நீளம் கொண்ட இந்த ரயில்வே மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.

இந்த பாலம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கிறது. முன்னதாக, பாலம் திறந்து வைக்கப்படுவதற்கு முன், அந்த பகுதியில் வழக்கம் போல அ.தி.மு.க., தொண்டர்கள் பேனர்களை வைத்தனர். அதில் இருந்த ஒவ்வொரு பேனர்களிலும் வித்தியாசமான தொகை குறிப்பிடப்பட்டிருந்தது.



ஒரு பேனரில், பாலத்திற்காக ரூ.31.93 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், மற்றொரு பேனரில், ரூ.24.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், அப்பகுதி மக்கள் குழப்பமடைந்தனர்.



இந்த சூழலில், தற்போது மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் போத்தனூர் ரயில்வே மேம்பாலம் ரூ.22 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



ஆளும் கட்சியினரின் பேனர் தொகைக்கும், மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில் உள்ள தொகைக்கும் சுமார் ரூ.9 கோடி வித்தியாசம் வருகிறது.

இதனால், இந்த நிதியில் எது உண்மையாக பாலத்திற்காக ஒதுக்கப்பட்டது? என்றும், ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பாலத்திற்கு செலவிடப்பட்டதா? என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...