அடிப்படை வசதிகள் வேண்டி திருப்பூர் ஆட்சியரிடத்தில் பொதுமக்கள் மனு

திருப்பூர்: அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரி காளிபாளையம் பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர்: அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரி காளிபாளையம் பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் விஜயாபுரம் அருகில் உள்ள காளிபாளையம் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட அருந்ததியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கக் கூடிய மக்களுக்கு அடிப்படை வசதிகளான சாக்கடை வசதிகள், தார் சாலை வசதிகள் இல்லை என்றும், பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகளுக்கு பேருந்து வசதிகள் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக, அரசு அதிகாரிகளைச் சந்தித்து பலமுறை மனு கொடுத்ததும் பயனில்லை என்றும், வாக்கு கேட்டு மட்டும் வரக்கூடியவர்கள் வெற்றி பெற்ற பின்னர் தங்களது பகுதிகளைக் கண்டு கொள்வதில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "நல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட எங்களது கிராமத்தில் சுமார் ஐந்து வருடமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா இல்லை. தற்போது தான் பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த பிரச்சனை குறித்து நல்லூர் நகராட்சியில் 10-க்கும் மேற்பட்ட முறை மனு அளிக்கப்பட்டுள்ளது. எந்த நடவடிக்கைகளும் எடுக்காத நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் 10-க்கும் மேற்பட்ட முறை மனு அளித்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.​ இந்தமுறை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்." என்றனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...