கோவை: கோவையில் மக்கள் நீதி மையம் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா மற்றும் நிர்வாகிகள் அறிமுகம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
கோவை: கோவையில் மக்கள் நீதி மையம் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா மற்றும் நிர்வாகிகள் அறிமுகம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இது குறித்து பேசிய மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, "கோவை மாவட்டத்தில் நான்கு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு கோவை தெற்கு, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவுக்கு மாவட்ட நிர்வாகியாக டி.பிரபு என்பவரும், கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் பகுதிகளுக்கு தம்புராஜ் (எ) எம்.பரமேஸ்வரன் என்பவரும், சிங்காநல்லூர் மற்றும் சூலூர் தொகுதிக்கு தாமரை கண்ணனும், பொள்ளாச்சி மற்றும் வால்பாறைக்கு செந்தாமரை கண்ணனும் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கோவை மாவட்ட கட்சி தலைமை அலுவலகமாக பெரியகடை வீதி சான்மா இண்டர்நேஷனல் விடுதி கீழ் தளத்தில் தொடங்கப்பட்டு இன்று கட்சி கொடி ஏற்றப்பட்டது. அடுத்து சில தினங்களில் புதிய பட்டியலை தலைமை வெளியிடும்." என்றார்.
இந்நிகழ்வில் கவிஞர் புவியரசு, மருத்துவர்கள் கணேசன், டெய்சி ஆடிட்டர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.