திருப்பூர்: கோவை-அவினாசி சாலை தெக்கலூர் அருகே அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
திருப்பூர்: கோவை-அவினாசி சாலை தெக்கலூர் அருகே அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
தெக்கலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த மினி வேன் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து, அந்த வேனின் பின்னால் வந்த மூன்று கார்கள் நிறுத்தப்பட்டன. ஆனால், அங்கு அதிவேகமாக வந்த தனியார் பேருந்து சாலையில் நின்ற கார்களின் மீது மோதியது.
இதனால், கார்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்துக்குள்ளானவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தனியார் பேருந்தின் அதிவேகமே விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து தெக்கலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தெக்கலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த மினி வேன் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து, அந்த வேனின் பின்னால் வந்த மூன்று கார்கள் நிறுத்தப்பட்டன. ஆனால், அங்கு அதிவேகமாக வந்த தனியார் பேருந்து சாலையில் நின்ற கார்களின் மீது மோதியது.
இதனால், கார்கள் ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்துக்குள்ளானவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தனியார் பேருந்தின் அதிவேகமே விபத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து தெக்கலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.