நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தொடரும் மழையால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தொடரும் மழையால் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்குப் பருவ மழை காலமாகும்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய பகுதிகளில் தொடர்ந்து காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து தடைபடுகிறது. நேற்றிலிருந்து உதகை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருவதால் நகரில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழையின் காரணமாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.