கோவை: அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் நிகழ்ச்சிக்கு இலவசமாக தானியங்கள் வழங்க இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை: அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் நிகழ்ச்சிக்கு இலவசமாக தானியங்கள் வழங்க இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாதம் கூழ் வார்க்கும் நிகழ்ச்சிக்கு தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

இது குறித்து அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில், "இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் நேன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு தமிழக அரசு சார்பில் 6000 மெட்ரிக் டன் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. அதே போல் கூழ் வார்க்கும் நிகழ்ச்சிக்கும் வழங்கப்பட்ட வேண்டும்.
முஸ்லீம், கிறிஸ்தவ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது போல் ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்க வேண்டும்.
கோவில்களில் அகல் விளக்கு ஏற்ற தடை செய்யப்பட்டுள்ளது. இத்தடையினை தமிழக அரசு நீக்க வேண்டும். பக்தர்கள் அவர்கள் அகல் விளக்கு ஏற்றி வழிப்பாட்டால் மட்டுமே ஒரு மன நிறைவு கிடைக்கும். இந்த தடையினால் அகல் விளக்கு செய்யும் மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் பலர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்படும்." என்றார்.