கோவை: விடாமல் தொடரும் கனமழை காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மனு நீதி நடைபெறும் நாளுக்கு மக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
கோவை: விடாமல் தொடரும் கனமழை காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மனு நீதி நடைபெறும் நாளுக்கு மக்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மனு நீதி நாள் நடைபெறும். இந்நாளில் நூற்றுக்கணக்கான மக்கள் மனு கொடுக்க வருவது வழக்கம். ஆனால், இன்று மழை காரணமாக பெரும்பாலான மக்கள் வரவில்லை இதனால் மனு நீதி நாள் வெறிச்சோடி காணப்பட்டது.

கோவை மாவட்ட மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் மற்றும் தங்கள் குறைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பார்கள். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார். இதனால் மனு நீதி நாள் மிகவும் பரபரப்பாக காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மழை காரணமாக மக்கள் கூட்டம் வரவில்லை என்பதால் இன்று நடைபெற்ற மனு நீதி நாளினை மீண்டும் இதே வாரத்தில் ஒரு நாள் நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மனு நீதி நாள் நடைபெறும். இந்நாளில் நூற்றுக்கணக்கான மக்கள் மனு கொடுக்க வருவது வழக்கம். ஆனால், இன்று மழை காரணமாக பெரும்பாலான மக்கள் வரவில்லை இதனால் மனு நீதி நாள் வெறிச்சோடி காணப்பட்டது.

கோவை மாவட்ட மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் மற்றும் தங்கள் குறைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுப்பார்கள். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார். இதனால் மனு நீதி நாள் மிகவும் பரபரப்பாக காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மழை காரணமாக மக்கள் கூட்டம் வரவில்லை என்பதால் இன்று நடைபெற்ற மனு நீதி நாளினை மீண்டும் இதே வாரத்தில் ஒரு நாள் நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.