கோவை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரெட்ஃபீல்ட்ஸ் கிளையில் நேற்று இரவு திடீரென எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரெட்ஃபீல்ட்ஸ் கிளையில் நேற்று இரவு திடீரென எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரெட்ஃபீல்ட்ஸ் கிளையானது ராமநாதபுரம் அகில இந்திய வானொலி நிலையம் அருகே உள்ளது. இந்த வங்கியில் அடிக்கடி எச்சரிக்கை அலாரம் தானாக அடிப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட திடீர் அலாரம் ஒலித்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து, பின்னர் வங்கி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அலாரம் நிறுத்தப்பட்டது.

இந்த சூழலில், நேற்று இரவும் திடீரென அந்த வங்கியில் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. இதனால் ராமநாதபுரம் திருச்சி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வங்கியில் அடிக்கடி தேவையில்லாமல் எச்சரிக்கை அலாரம் ஒலிப்பது ஆபத்தானது. இப்படி தேவையில்லாமல் எச்சரிக்கை அலாரம் அடிப்பது ஆபத்தான நேரத்தில் பயன்படாமல் போய்விடும்.
ஆகவே வங்கி நிர்வாகம் இந்த விஷயத்தை அலட்சியப்படுத்தாமல் தேவையில்லாத நேரங்களில் அலாரம் ஏன் ஒலிக்கிறது? என்பதை ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும் என்பதே அப்பகுதியிலுள்ள மக்களின் கோரிக்கையாக உள்ளது.