கோவை: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
கோவை: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.
மேற்குத்தொடர்ச்சி மலைத் தொடர்கள், மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் தற்போது இரண்டாம் கட்ட தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்த நிலையில், இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.

காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம், பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம், வடவள்ளி, வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த கனமழையிலும், கோவை வாசிகள் தங்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.

வால்பாறையில் கடந்த சில நாட்களாகவே இந்த மழை தொடர்கிறது. இதனால், பல்வேறு சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், மின் விநியோகம் தடைபட்டுள்ளது.
