கொட்டும் மழையிலும் தி.மு.க., தெற்கு மாவட்ட வால்பாறை செயல்வீரர்கள் கூட்டம்

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொட்டும் மழையிலும் தி.மு.க., தெற்கு மாவட்ட வால்பாறை நகர கழக செயல்வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொட்டும் மழையிலும் தி.மு.க., தெற்கு மாவட்ட வால்பாறை நகர கழக செயல்வீரர்கள் மற்றும் பொது உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது.



வால்பாறை நகர கழகம் ஏற்பாடு செய்யப்பட்ட அலுவலகத்திலும், பழைய பேருந்து நிலையத்திலும் கொடியேற்றப்பட்டது. இதற்கு மத்தியில், அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வால்பாறை நகர கழக செயற்குழு மற்றும் பொது உறுப்பினர்களின் கூட்டம் சரவண மஹாலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அவைத்தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். நகர கழக பொறுப்பாளர் பால்பாண்டி வரவேற்புரையாற்றினர். 

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மற்றும் கோவை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ்  ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்தக் கூட்டத்தில் கழக மாவட்ட நிர்வாகிகளும், வால்பாறை முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜானகிராமர், சத்தியவாணிமுத்து, நகர்மன்ற உறுப்பினர்கள், மொய்தீன், சுதாகர், செல்வம், இந்துமதி, சூர்யபிரபா மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...