கோவை : கோவை குற்றாலம் அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக வேரோடு சாய்ந்த மரங்களை ஊழியர்கள் அகற்றினர்.
கோவை : கோவை குற்றாலம் அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக வேரோடு சாய்ந்த மரங்களை ஊழியர்கள் அகற்றினர்.

போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், அப்பகுதியில் இருந்த தேக்கு, பாக்கு மற்றும் புளிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால், உயர்மின் அழுத்த மின்கம்பிகள் அறுந்து, அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மின்சார வயர்களை சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டனர். அங்கு வீசி வரும் பலத்த காற்று காரணமாக மரங்களை அகற்றும் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது.

மேலும், கோவை குற்றாலப்பகுதிகளில் தொடர் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக இன்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 20 நாட்களுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், அப்பகுதியில் இருந்த தேக்கு, பாக்கு மற்றும் புளிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால், உயர்மின் அழுத்த மின்கம்பிகள் அறுந்து, அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மின்சார வயர்களை சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டனர். அங்கு வீசி வரும் பலத்த காற்று காரணமாக மரங்களை அகற்றும் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது.

மேலும், கோவை குற்றாலப்பகுதிகளில் தொடர் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக இன்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 20 நாட்களுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.