கோவை குற்றாலம் அருகே வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றிய ஊழியர்கள்

கோவை : கோவை குற்றாலம் அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக வேரோடு சாய்ந்த மரங்களை ஊழியர்கள் அகற்றினர்.

கோவை : கோவை குற்றாலம் அருகே பலத்த காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக வேரோடு சாய்ந்த மரங்களை ஊழியர்கள் அகற்றினர். 



போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், அப்பகுதியில் இருந்த தேக்கு, பாக்கு மற்றும் புளிய மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால், உயர்மின் அழுத்த மின்கம்பிகள் அறுந்து, அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மின்சார வயர்களை சரிசெய்யும் பணிகளை மேற்கொண்டனர். அங்கு வீசி வரும் பலத்த காற்று காரணமாக மரங்களை அகற்றும் பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டது. 



மேலும், கோவை குற்றாலப்பகுதிகளில் தொடர் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக இன்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 20 நாட்களுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...