கோவை: ஓட்டபந்தயத்தின் முக்கியத்துவம் குறித்தும், அதனை ஊக்கப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கோவை: ஓட்டபந்தயத்தின் முக்கியத்துவம் குறித்தும், அதனை ஊக்கப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கோவை நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கிய மாரத்தான் போட்டியை ரயில்வே ஏ.டி.ஜி.பி., சைலேந்திர பாபு கொடியசைத்து தொடங்கி வைத்ததுடன், இந்தப் போட்டியிலும் பங்கேற்றார். 3 வயது முதல் 70 வயது வரையிலான முதியவர்கள் கலந்து கொண்டனர்.

இன்டெர்ஸ்டிஸ் என்ற தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த மாரத்தான், 5 கி.மீ., 10 கி.மீ., மற்றும் 15 கி.மீ., என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு வழங்கினார்.