டி.டி.வி., தினகரன் தன்னை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார் : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி காட்டம்

கோவை: கோவையில் நடைபெற்ற அ.ம.மு.க., பொதுக்கூட்டத்தில் டி.டி.வி தினகரன் தன்னை பற்றி தரம் தாழ்ந்து விமர்சித்திருப்பதாகவும், அவர் விமர்சித்தது உண்மை எனில் எந்தக் கோவிலிலும் வந்து சொல்லட்டும் என அமைச்சர் வேலுமணி காட்டமாக பதிலளித்துள்ளார்.

கோவை: கோவையில் நடைபெற்ற அ.ம.மு.க., பொதுக்கூட்டத்தில் டி.டி.வி தினகரன் தன்னை பற்றி தரம் தாழ்ந்து விமர்சித்திருப்பதாகவும், அவர் விமர்சித்தது உண்மை எனில் எந்தக் கோவிலிலும் வந்து சொல்லட்டும் என அமைச்சர் வேலுமணி காட்டமாக பதிலளித்துள்ளார்.

ஆர்.எஸ்.புரம், பாலசுந்தரம் சாலை என ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 113 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் திவான் பகதூர் சாலையை மாதிரி சாலையாக உருவாக்கும் பணியை ஆரம்பித்து வைத்தார். 



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும். எதிர்க்கட்சிகள் எத்தனை இடையூறுகள் செய்தாலும் 24 மணிநேர குடிநீர் திட்டம் கோவைக்கு கொண்டு வரப்படும். நதியை சீரமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியைக் கொண்டு நொய்யலில் கழிவு கலப்பதை முற்றிலும் நிறுத்தப்படும், என்றார். 



மேலும், கோவையில் நடைபெற்ற அ..ம.மு.க., பொதுக்கூட்டத்தில் டி.டி.வி., தினகரன் விமர்சித்தது குறித்த கேள்விக்கு அமைச்சர் வேலுமணி பதிலளிக்கையில், "ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் நான் பணியாற்றியதை தரம் தாழ்ந்து தினகரன் விமர்சித்திருக்கிறார். அத்தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலின் போது தான் அம்மாவட்ட செயலாளராக இருந்த சண்முகவேலு தலைமையில் வடுகப்பட்டியில் தான் பணியாற்றினேன். உண்மையில்லாத பலவற்றை கூறும் தினகரன், அதுபோன்ற கருத்துக்களை எந்த கோவிலிலும் சொல்லட்டும். 

இதேபோல, தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ள தினகரன், தி.மு.க.,வை விமர்சிப்பதில்லை. தினகரனுக்காக சட்டமன்றத்தில் தி.மு.க.,. எம்.எல்.ஏ., அன்பழகன் எழுந்து குரல் எழுப்புகிறார். ஒன்றரை கோடி அ.தி.மு.க.,வினரும் அம்மாவின் வாரிசுகளாவர். தன்னைத் தானே அம்மாவின் வாரிசு என கூறிக் கொண்டு தினகரன் கட்சி ஆரம்பித்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். ஆர்.கே., நகர் இடைத்தேர்தலில் பணத்தை காட்டி வென்றது போல், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைக் காட்டி வெளிமாநில தொழிலாளர்களை வைத்து பொதுக்கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்," இவ்வாறு கூறினார். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...