தொடர் மழையினால் 2-வது முறையாக நிரம்பி வழியும் சிறுவாணி அணை

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சிறுவாணி அணை 2-வது முறையாக நிரம்பி வழிகிறது.

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக சிறுவாணி அணை 2-வது முறையாக நிரம்பி வழிகிறது. 

கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை, நேற்று மாலை மீண்டும் அதன் மொத்தக் கொள்ளளவான 50 அடியை எட்டியுள்ளது. இதனால், கோவை மாநகர் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்றும் மழை நீடித்ததால், நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2-ம் தேதி அதன் கொள்ளளவை எட்டியது. தொடர் மழையினால், 10-ம் தேதி அணையில் இருந்து நீர் நிரம்பி வழிய ஆரம்பித்தது. இதனால், விநாடிக்கு 7 கனஅடி நீர் மதகுகளில் வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரும், கொள்ளளவை எட்டியதால் நிரம்பி வழியும் உபரிநீரும் பில்லூர் அணையைச் சென்றடைகிறது. 

2-வது முறையாக சிறுவாணி அணை மீண்டும் அதன் கொள்ளளவை கடந்து பாய்ந்து வருகிறது. இதன்மூலம், அடுத்த 6 மாத காலத்திற்கு கோவை மாவட்ட மக்களுக்கு குடிநீர் பிரச்சினை வராது என்பது உறுதியாகியுள்ளது. இதேபோல, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் தொடர் மழையினால், சுற்றுலாத் தலமான கோவை குற்றாலம் 20 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...