ரயில்களில் இருக்கும் அபாய சங்கிலியை ஆபத்து காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெற்கு ரயில்வே பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரயில்களில் இருக்கும் அபாய சங்கிலியை ஆபத்து காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெற்கு ரயில்வே பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரயில் பயணத்தின் போது ஆபத்து காலங்களில் பயணிகளுக்கு உதவிடும் வகையில், அபாய சங்கிலி அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமான நேரங்களில் பயன்படுத்த வேண்டிய இந்த அபாய சங்கிலியை, பயணிகள் அற்ப காரணங்களுக்காக பயன்படுத்தி வருவதாக ரயில்வே நிர்வாகம் குற்றம்சாட்டி வருகிறது. ரயிலை தவறவிட்டவருக்காகவும், பயணத்தின் போது செல்போனை கீழே போடுதல், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் தின்பண்டங்கள் போன்றவை ரயில் இருந்து தவறி விழும் போது, அதனை எடுக்க போன்ற காரணங்களுக்காக அபாய சங்கிலியை பயணிகள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த மாதிரியான அற்ப காரணங்களுக்காக பயன்படுத்தினால், ரயில்வேத்துறை 141 பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்படுகிறது. அதாவது, ஒரு ஆண்டு சிறை அல்லது ரூ. 1,000 அபாரம் வசூலிக்கப்படுகிறது. இதுவரை, இந்த ஆண்டில் ஜுன் மாதம் வரையில் 737 பேரிடம் ரூ. 2.8 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரயில்களில் இருக்கும் அபாய சங்கிலியை ஆபத்து காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெற்கு ரயில்வே பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரயில் பயணத்தின் போது ஆபத்து காலங்களில் பயணிகளுக்கு உதவிடும் வகையில், அபாய சங்கிலி அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் முக்கியமான நேரங்களில் பயன்படுத்த வேண்டிய இந்த அபாய சங்கிலியை, பயணிகள் அற்ப காரணங்களுக்காக பயன்படுத்தி வருவதாக ரயில்வே நிர்வாகம் குற்றம்சாட்டி வருகிறது. ரயிலை தவறவிட்டவருக்காகவும், பயணத்தின் போது செல்போனை கீழே போடுதல், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் தின்பண்டங்கள் போன்றவை ரயில் இருந்து தவறி விழும் போது, அதனை எடுக்க போன்ற காரணங்களுக்காக அபாய சங்கிலியை பயணிகள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த மாதிரியான அற்ப காரணங்களுக்காக பயன்படுத்தினால், ரயில்வேத்துறை 141 பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்படுகிறது. அதாவது, ஒரு ஆண்டு சிறை அல்லது ரூ. 1,000 அபாரம் வசூலிக்கப்படுகிறது. இதுவரை, இந்த ஆண்டில் ஜுன் மாதம் வரையில் 737 பேரிடம் ரூ. 2.8 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரயில்களில் இருக்கும் அபாய சங்கிலியை ஆபத்து காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தெற்கு ரயில்வே பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.