கோவை: கோவையில் உள்ள கலைமகள் கல்லூரியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட போலி பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவை: கோவையில் உள்ள கலைமகள் கல்லூரியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட போலி பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆறுமுகம் மீது உயிரிழப்பு ஏற்படும் என தெரிந்தும் மரணம் விளைவித்தல் பிரிவு (304)-ஐ பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணைக்கு, பிறகு இன்று ஆறுமுகத்தை கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-2 ல் நீதிபதி (பொறுப்பு) ஞானசம்பந்தம் முன்பு ஆஜர்படுத்தினர். இதனையடுத்து அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதில் ஆறுமுகத்தை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனுவை 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து போலி பேரிடர் பயிற்சியாளர் ஆறுமுகம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Video: Laxman
கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆறுமுகம் மீது உயிரிழப்பு ஏற்படும் என தெரிந்தும் மரணம் விளைவித்தல் பிரிவு (304)-ஐ பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணைக்கு, பிறகு இன்று ஆறுமுகத்தை கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-2 ல் நீதிபதி (பொறுப்பு) ஞானசம்பந்தம் முன்பு ஆஜர்படுத்தினர். இதனையடுத்து அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதில் ஆறுமுகத்தை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனுவை 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து போலி பேரிடர் பயிற்சியாளர் ஆறுமுகம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Video: Laxman