கோவை: கோவையில் கடந்த 12-ம் தேதி காவல்துறை வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவை: கோவையில் கடந்த 12-ம் தேதி காவல்துறை வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கோவையை அடுத்துள்ள கணியூர் சுங்கச்சாவடியில் கடந்த 12-ம் தேதி இருசக்கர வாகனமும், காவல்துறை வேன் வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சாமளாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (64) என்பவர் பலியானார். உடன் வந்த இவரது மனைவி தேவி (55) படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சூழலில், விபத்து தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், கணியூர் சுங்கச்சாவடியின் அருகே கணவன்-மனைவி இருவரும், இரு சக்கர வாகனத்தில் ஒரு வழிப்பாதையில் செல்ல முயற்சித்ததும், அதனால், விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கருமத்தம்பட்டி போலீசார், காவல்துறை வாகனத்தை ஓட்டி வந்த கருப்புசாமி என்ற காவலர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.