குருகுலம் கல்வி அடிப்படையில் 6 ஆண்டுகளைக் கொண்ட ஆயுர்வேத கல்வியை மத்திய அரசு அறிமுகம் செய்கிறது.
குருகுலம் கல்வி அடிப்படையில் 6 ஆண்டுகளைக் கொண்ட ஆயுர்வேத கல்வியை மத்திய அரசு அறிமுகம் செய்கிறது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க., அரசு மருத்துவம் மற்றும் சுகாதாரத்திற்காக ஆயுஸ் அமைச்சகத்தை உருவாக்கியது. இந்தத் துறையானது, ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆயுர்வேத வைத்திய பார்மஸியின் 75-ம் ஆண்டு விழாவில் ஆயுஸ் அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் கோட்சா கலந்து கொண்டார்.

அப்போது, அவர் பேசியதாவது:- மேலைநாட்டு மருத்துவக் கல்வியின் மோகத்தால் குருகுலம் கல்வி முறை அழிந்து வருகிறது. எனவே, அதற்கு மீண்டும் உயிரூட்டும் வகையில், குருகுலம் அடிப்படையில் ஆயுர்வேத கல்வி முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது, என்றார்.

75-ம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவரும், ஆயுர்வேத ஆசிரியருமான சாகு தலைமையில் இரண்டு நாள் ஆயுர்வேத பயிற்சிப் பட்டறை தொடங்கியது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க., அரசு மருத்துவம் மற்றும் சுகாதாரத்திற்காக ஆயுஸ் அமைச்சகத்தை உருவாக்கியது. இந்தத் துறையானது, ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆயுர்வேத வைத்திய பார்மஸியின் 75-ம் ஆண்டு விழாவில் ஆயுஸ் அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் கோட்சா கலந்து கொண்டார்.

அப்போது, அவர் பேசியதாவது:- மேலைநாட்டு மருத்துவக் கல்வியின் மோகத்தால் குருகுலம் கல்வி முறை அழிந்து வருகிறது. எனவே, அதற்கு மீண்டும் உயிரூட்டும் வகையில், குருகுலம் அடிப்படையில் ஆயுர்வேத கல்வி முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது, என்றார்.

75-ம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவரும், ஆயுர்வேத ஆசிரியருமான சாகு தலைமையில் இரண்டு நாள் ஆயுர்வேத பயிற்சிப் பட்டறை தொடங்கியது.