திருப்பூர்: திருப்பூர் அருகே நள்ளிரவில் வீட்டில் இருப்பவர்களைத் தாக்கிவிட்டு, பெண்ணின் கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் நகையை கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் அருகே நள்ளிரவில் வீட்டில் இருப்பவர்களைத் தாக்கிவிட்டு, பெண்ணின் கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் நகையை கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மங்கலம் சாலை ஆண்டிபாளையம் அருகே ஜான்ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் பனியன் கம்பெனி அதிபர் பாலகிருஷ்ணன். இவர் தனது மனைவி சுப்புலட்சுமி, மகன் கோகுலுடன் வீட்டின் உள்அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை 2 மணியளவில், வீட்டின் பூட்டை உடைக்கும் சத்தம் வந்ததை அறிந்த பாலகிருஷ்ணன் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, இரண்டு முகமூடி கொள்ளையர்கள் திடீரென வீட்டினுள் நுழைந்து பாலகிருஷ்ணனை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதனால், அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
இந்த நிலையில், சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட அவரது மகன் மற்றும் மனைவி சுப்புலட்சுமியையும் அந்தக் கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். பின்னர், சுப்புலட்சுமி அணிந்திருந்த இரண்டரை சவரன் நகையைக் கொள்ளையர்கள் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து, முகமூடி கொள்ளையர்கள் அருகே இருக்கும் செந்தில் நகர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள 3 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு வீட்டின் கதவை திறக்க முடியாததால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசத்தால் ஜான் ஜோதி கார்டன், செந்தில் நகர் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும், இந்த சம்பவம் பற்றி திருப்பூர் மத்திய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மங்கலம் சாலை ஆண்டிபாளையம் அருகே ஜான்ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் பனியன் கம்பெனி அதிபர் பாலகிருஷ்ணன். இவர் தனது மனைவி சுப்புலட்சுமி, மகன் கோகுலுடன் வீட்டின் உள்அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை 2 மணியளவில், வீட்டின் பூட்டை உடைக்கும் சத்தம் வந்ததை அறிந்த பாலகிருஷ்ணன் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, இரண்டு முகமூடி கொள்ளையர்கள் திடீரென வீட்டினுள் நுழைந்து பாலகிருஷ்ணனை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதனால், அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
இந்த நிலையில், சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட அவரது மகன் மற்றும் மனைவி சுப்புலட்சுமியையும் அந்தக் கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். பின்னர், சுப்புலட்சுமி அணிந்திருந்த இரண்டரை சவரன் நகையைக் கொள்ளையர்கள் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து, முகமூடி கொள்ளையர்கள் அருகே இருக்கும் செந்தில் நகர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள 3 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு வீட்டின் கதவை திறக்க முடியாததால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசத்தால் ஜான் ஜோதி கார்டன், செந்தில் நகர் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும், இந்த சம்பவம் பற்றி திருப்பூர் மத்திய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.