திருப்பூரில் வீட்டின் உரிமையாளரைத் தாக்கி மனைவியின் தங்கசங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையர்கள்

திருப்பூர்: திருப்பூர் அருகே நள்ளிரவில் வீட்டில் இருப்பவர்களைத் தாக்கிவிட்டு, பெண்ணின் கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் நகையை கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் அருகே நள்ளிரவில் வீட்டில் இருப்பவர்களைத் தாக்கிவிட்டு, பெண்ணின் கழுத்தில் இருந்த இரண்டரை சவரன் நகையை கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



மங்கலம் சாலை ஆண்டிபாளையம் அருகே ஜான்ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் பனியன் கம்பெனி அதிபர் பாலகிருஷ்ணன். இவர் தனது மனைவி சுப்புலட்சுமி, மகன் கோகுலுடன் வீட்டின் உள்அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். 

இன்று அதிகாலை 2 மணியளவில், வீட்டின் பூட்டை உடைக்கும் சத்தம் வந்ததை அறிந்த பாலகிருஷ்ணன் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது, இரண்டு முகமூடி கொள்ளையர்கள் திடீரென வீட்டினுள் நுழைந்து பாலகிருஷ்ணனை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதனால், அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். 

இந்த நிலையில், சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட அவரது மகன் மற்றும் மனைவி சுப்புலட்சுமியையும் அந்தக் கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். பின்னர், சுப்புலட்சுமி அணிந்திருந்த இரண்டரை சவரன் நகையைக் கொள்ளையர்கள் பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். 



இதைத்தொடர்ந்து, முகமூடி கொள்ளையர்கள் அருகே இருக்கும் செந்தில் நகர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள 3 வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு வீட்டின் கதவை திறக்க முடியாததால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். 



இந்த முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசத்தால் ஜான் ஜோதி கார்டன், செந்தில் நகர் மக்கள் பீதியில் உள்ளனர். மேலும், இந்த சம்பவம் பற்றி திருப்பூர் மத்திய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...