கோவை: காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் மரங்களின் கிளைகள் அல்லது வளைந்து வளர்ந்துள்ள மரங்கள் கீழே விழும் அபாயம் உள்ளது.
கோவை: காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் மரங்களின் கிளைகள் அல்லது வளைந்து வளர்ந்துள்ள மரங்கள் கீழே விழும் அபாயம் உள்ளது. அதனால் மரங்களுக்கு கீழே நிற்க வேண்டாம் எனவும் கால்நடைகளை மரங்களுக்கு கீழே கட்ட வேண்டாம் என்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "கோவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மழைக்கும் வாய்ப்புள்ளது.
இதனிடையே பகல் நேர வெப்ப நிலையானது 30 முதல் 31 டிகிரி செல்சியாஸ்-ஆகவும், இரவு நேர வெப்ப நிலை 20 முதல் 21 டிகிரி செல்சியாஸ்-ஆகவும் நிலவ வாய்ப்புள்ளது.
காற்றின் வேகம்:
கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைப் பொறுத்தவரையில் 18 முதல் 20 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீச வாய்ப்புள்ளது.
வெற்று இடங்களில் சூழல் காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் சிதிலமடைந்த மரங்களையும், மர கிளைகளையும் முன்கூட்டியே அகற்றிவிடுவது நல்லது.
அதே போன்று, வாழை மரங்களுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும், கரும்புகளுக்கு கயிறு கட்டி காற்றின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது, பல்லடம், உடுமலைபேட்டை போன்ற பகுதிகளில் உள்ள காற்றாலைகள் மூலம் மின்சாரம் அதிக அளவில் கிடைக்க வாய்ப்புள்ளது." என்றார்.
இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "கோவையில் அடுத்த நான்கு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மழைக்கும் வாய்ப்புள்ளது.
இதனிடையே பகல் நேர வெப்ப நிலையானது 30 முதல் 31 டிகிரி செல்சியாஸ்-ஆகவும், இரவு நேர வெப்ப நிலை 20 முதல் 21 டிகிரி செல்சியாஸ்-ஆகவும் நிலவ வாய்ப்புள்ளது.
காற்றின் வேகம்:
கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களைப் பொறுத்தவரையில் 18 முதல் 20 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீச வாய்ப்புள்ளது.
வெற்று இடங்களில் சூழல் காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் சிதிலமடைந்த மரங்களையும், மர கிளைகளையும் முன்கூட்டியே அகற்றிவிடுவது நல்லது.
அதே போன்று, வாழை மரங்களுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும், கரும்புகளுக்கு கயிறு கட்டி காற்றின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது, பல்லடம், உடுமலைபேட்டை போன்ற பகுதிகளில் உள்ள காற்றாலைகள் மூலம் மின்சாரம் அதிக அளவில் கிடைக்க வாய்ப்புள்ளது." என்றார்.