வரும் 17-ம் தேதி முதல் திருப்பூர் - கோவை இடையிலான ரயில் சேவையில் மாற்றம்

கோவை: கோவை - திருப்பூர் இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வரும் 17-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரையிலான ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கோவை: கோவை - திருப்பூர் இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வரும் 17-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரையிலான ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்:- 17, 23, 26 ஆக., 02 மற்றும் ஆக., 04 ஆகிய தேதிகளில் சேலம்-கோவை பயணிகள் ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. மேலும், வரும் 17-ம் தேதி கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரூ இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - கோரக்பூர் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ், மங்களூரூ சென்ட்ரல் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ், பாலக்காடு டவுன் - ஈரோடு பயணிகள் ரயில் ஆகிய ரயில்கள் சூலூர் ரயில் நிறுத்தத்தில் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். 

அலப்புழா - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவையில் 01.25 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். கோவையில் இருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், 01.25 மணிக்கு கிளம்பும். 

எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரூ எக்ஸ்பிரஸ் கோவையில் சுமார் 45 நிமிடங்கள் நிறுத்தப்படும். அதன்படி, மதியம் 12.50 மணிக்கு கிளம்ப வேண்டிய இந்த ரயில், 01.35 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும். 

மேலும், வரும் 19-ம் தேதி மங்களூரூ ரயில்நிறுத்தம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், டாடா/தன்பாத் - அலப்புழா எக்ஸ்பிரஸ், ஐதராபாத் - எர்ணாகுளம் சிறப்பு ரயில், ஷாலிமார் - திருவனந்தபுரம், கே.எஸ்.ஆர்., பெங்களூரூ - எர்ணாகுளம், சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், சென்னை சென்ட்ரல் கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சூலூர் ரயில் நிறுத்தத்தில் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும். 

இதேபோல, வரும் 23-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள் : கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், கோவை - சென்னை சென்ட்ரல் கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - கோர்பா, மங்களூரூ சென்ட்ரல் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ், பாலக்காடு டவுன் - ஈரோடு பயணிகள் ரயில் ஆகியவை இருகூர் ரயில் நிறுத்தத்தில் இருந்து 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

26-ம் தேதி ஜெய்ப்பூர்- கோவை அதிவிரைவு எக்ஸ்பிரஸ், ஈரோடு ரயில்நிறுத்தத்தில் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தப்படும். இதேபோல, கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், கோவை சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - கோர்பா, மங்களூரூ சென்ட்ரல் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சுமார் 15 நிமிடங்கள் இருகூர் ரயில் நிறுத்தத்தில் இருந்து தாமதமாக இயக்கப்படும். 

வரும் 28-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்:-

அலப்புழா - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவையில் 01.10 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். கோவையில் இருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், 01.10 மணிக்கு கிளம்பும்.

எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரூ எக்ஸ்பிரஸ் கோவையில் சுமார் 35 நிமிடங்கள் நிறுத்தப்படும். அதன்படி, மதியம் 12.50 மணிக்கு கிளம்ப வேண்டிய இந்த ரயில், 01.25 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும். 

இதேபோல, மங்களூரூ சென்ட்ரல் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், டாடா/தன்பாத் - அலப்புழா எக்ஸ்பிரஸ், பாட்னா - எர்ணாகுளம், கே.எஸ்.ஆர்., பெங்களூரூ - எர்ணாகுளம், சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சுமார் 15 நிமிடங்கள் இருகூர் ரயில் நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

30-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்:

அலப்புழா - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவையில் 01.10 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும். கோவையில் இருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், 01.10 மணிக்கு கிளம்பும்.

எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர்., பெங்களூரூ எக்ஸ்பிரஸ் கோவையில் சுமார் 35 நிமிடங்கள் நிறுத்தப்படும். அதன்படி, மதியம் 12.50 மணிக்கு கிளம்ப வேண்டிய இந்த ரயில், 01.25 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும்.

இதேபோல, சென்னை எழும்பூர் - மங்களூரூ சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், டாடா/தன்பாத் - அலப்புழா எக்ஸ்பிரஸ், கே.எஸ்.ஆர்., பெங்களூரூ - எர்ணாகுளம், சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சுமார் 15 நிமிடங்கள் இருகூர் ரயில் நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்படும்.

02-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்: ஜெய்ப்பூர்- கோவை அதிவிரைவு எக்ஸ்பிரஸ், ஈரோடு ரயில்நிறுத்தத்தில் சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தப்படும். 

04-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்: கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ், கோவை சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - இந்தூர், மங்களூரூ சென்ட்ரல் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - ஐதராபாத் சபரி எக்ஸ்பிரஸ், பாலக்காடு டவுன் - ஈரோடு பயணிகள் ரயில் ஆகியவை சுமார் 15 நிமிடங்கள் பீளமேடு ரயில் நிறுத்தத்தில் இருந்து தாமதமாக இயக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...