கோவை: கோவை அருகே குண்டும், குழியுமாக உள்ள நீலிக்கோணாம்பாளையம் சாலையைச் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் பார்வையிட்டார்.
கோவை: கோவை அருகே குண்டும், குழியுமாக உள்ள நீலிக்கோணாம்பாளையம் சாலையைச் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் பார்வையிட்டார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட நீலிக்கோணாம்பாளையம், 8,59,62 வார்டு சாலைகள் மற்றும் வசந்தாமில் வரையில் உள்ள திருச்சிச் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் மறுசீரமைப்பு செய்யாமல் உள்ளதால் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனிடையே, மோசமான நிலையில் உள்ள சாலைகளை, இன்று காலை தி.மு.க., கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் நடந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி தரைப்பாலத்தையும் அவர் பார்வையிட்டார்.
இது குறித்து நா. கார்த்திக் கூறுகையில், "கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட நீலிக்கோணாம்பாளையம், 8,59,62 வார்டு சாலைகள் மற்றும் வசந்தாமில் வரையில் உள்ள திருச்சிச் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகள் மறுசீரமைப்பு செய்யாமல் உள்ளதால் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனிடையே, மோசமான நிலையில் உள்ள சாலைகளை, இன்று காலை தி.மு.க., கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் நடந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி தரைப்பாலத்தையும் அவர் பார்வையிட்டார்.
இது குறித்து நா. கார்த்திக் கூறுகையில், "கோவை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.
