கோவை : உக்கடத்தை அடுத்த ஆத்துப்பாலம் அருகே நொய்யல் ஆற்றின் பெயர் பலகையை வைத்த கோவை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கோவை : உக்கடத்தை அடுத்த ஆத்துப்பாலம் அருகே நொய்யல் ஆற்றின் பெயர் பலகையை வைத்த கோவை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கோவையின் முக்கிய ஆறுகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது நொய்யல் ஆறாகும். அழிவின் பாதைக்கு சென்று, மீண்டும் மறுவாழ்வு பெற்றுள்ள இந்த ஆறு, தற்போது பெய்யும் தொடர் மழையால் நிரம்பி வழிகிறது. சிறுவாணி மலை அடிவாரத்தில் உருவாகும், இந்த ஆறு பேரூர் வழியாக ஆத்துப்பாலத்தை கடந்து பாய்கிறது. இந்த நிலையில், நொய்யல் ஆற்றை செழிப்பாக மாற்ற உதவிய சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், ஆத்துப்பாலம் அருகே 'நொய்யல் ஆறு' என்ற பெயர் பலகையைப் பொருத்த கோவை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்ற மாநகராட்சி நிர்வாகம், ஆத்துப்பாலம் அருகே நொய்யல் ஆற்றின் பெயர் பலகையைப் பொருத்தியது. இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஆத்துப்பாலத்தின் பெயரை, 'நொய்யல் ஆத்துப்பாலம்' என மாற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டது.
கோவையின் முக்கிய ஆறுகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது நொய்யல் ஆறாகும். அழிவின் பாதைக்கு சென்று, மீண்டும் மறுவாழ்வு பெற்றுள்ள இந்த ஆறு, தற்போது பெய்யும் தொடர் மழையால் நிரம்பி வழிகிறது. சிறுவாணி மலை அடிவாரத்தில் உருவாகும், இந்த ஆறு பேரூர் வழியாக ஆத்துப்பாலத்தை கடந்து பாய்கிறது. இந்த நிலையில், நொய்யல் ஆற்றை செழிப்பாக மாற்ற உதவிய சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், ஆத்துப்பாலம் அருகே 'நொய்யல் ஆறு' என்ற பெயர் பலகையைப் பொருத்த கோவை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்ற மாநகராட்சி நிர்வாகம், ஆத்துப்பாலம் அருகே நொய்யல் ஆற்றின் பெயர் பலகையைப் பொருத்தியது. இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஆத்துப்பாலத்தின் பெயரை, 'நொய்யல் ஆத்துப்பாலம்' என மாற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டது.