கோவை: உடல்பருமனைக் குறைப்பதற்கான சிகிச்சையில் பயனடைந்தவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜெம் மருத்துவமனையில் நடைபெற்றது.
கோவை: உடல்பருமனைக் குறைப்பதற்கான சிகிச்சையில் பயனடைந்தவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜெம் மருத்துவமனையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உடல் பருமன் கொண்ட 50-க்கும் மேற்பட்டோர் ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது, அவர்கள் உடல் எடையைக் குறைத்து பயனடைந்துள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி, மருத்துவமனையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீரிழிவு மற்றும் உடல்பருமன் சிகிச்சைத்துறையின் தலைவரும், மருத்துவருமான பிரவீன்ராஜ் கூறுகையில், "தமிழக முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாதம் 5 பேருக்கு மட்டுமே உடல்பருமன் சிகிச்சை அளிக்க முடியும். இதனை தமிழக அரசு அதிகப்படுத்த வேண்டும். அப்படி செய்தால், ஏராளமானோர் பயனடைவார்கள்," என்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உடல் பருமன் கொண்ட 50-க்கும் மேற்பட்டோர் ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது, அவர்கள் உடல் எடையைக் குறைத்து பயனடைந்துள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி, மருத்துவமனையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீரிழிவு மற்றும் உடல்பருமன் சிகிச்சைத்துறையின் தலைவரும், மருத்துவருமான பிரவீன்ராஜ் கூறுகையில், "தமிழக முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாதம் 5 பேருக்கு மட்டுமே உடல்பருமன் சிகிச்சை அளிக்க முடியும். இதனை தமிழக அரசு அதிகப்படுத்த வேண்டும். அப்படி செய்தால், ஏராளமானோர் பயனடைவார்கள்," என்றார்.