கோவை: கோவையில் உணவு பாதுகாப்புக்கு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா போதை பொருட்கள் நான்காவது முறையாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.
கோவை: கோவையில் உணவு பாதுகாப்புக்கு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ குட்கா போதை பொருட்கள் நான்காவது முறையாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்து.

தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா குறித்த ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை தாமஸ் வீதி பகுதியில் வாகாராம் என்பவர் சிறிய அறை ஒன்றை எடுத்து, ஊதுபத்தி குடோனாக பயன்படுத்துவதாகக் பயன்படுத்தி வந்துள்ளார்.
ஆனால், அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விநியோகம் செய்வதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, காவல்துறை உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு குட்கா, பான்மசாலா, போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது :- சுமார் 250 கிலோ எடையுடைய குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்துள்ளோம். இதன் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சம் இருக்கக்கூடும். தொடர்ந்து தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் பதுக்கல்களைக் கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.
கடந்த 20 நாட்களில் மட்டும் கோவையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், சுமார் மூன்றரை டன் எடையுடைய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா குறித்த ஆய்வினை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை தாமஸ் வீதி பகுதியில் வாகாராம் என்பவர் சிறிய அறை ஒன்றை எடுத்து, ஊதுபத்தி குடோனாக பயன்படுத்துவதாகக் பயன்படுத்தி வந்துள்ளார்.
ஆனால், அங்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விநியோகம் செய்வதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, காவல்துறை உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு குட்கா, பான்மசாலா, போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது :- சுமார் 250 கிலோ எடையுடைய குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்துள்ளோம். இதன் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சம் இருக்கக்கூடும். தொடர்ந்து தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் பதுக்கல்களைக் கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம், என்றார்.
கடந்த 20 நாட்களில் மட்டும் கோவையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், சுமார் மூன்றரை டன் எடையுடைய தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.